Thursday, August 10, 2006

சிவாஜி பட ஷ¨ட்டிங் கூட்டத்தால் பரபரப்பு

நேற்று காலை சென்னையில் பின்னி மில் இயங்கிய இடத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக லண்டனைப் போன்ற சூழலில் பிரமாண்ட கட்டடங்கள் இருப்பது போன்று ரூ. 50 லட்சத்தில் செட் போடப்பட்டிருந்தது.

அந்த செட்டில் ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் நடனம் கற்றுக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் 40க்கும் மேற்பட்டோர் ரஜினியை பார்க்க செட்டுக்குள் நுழைந்தனர். இதைக் கண்டு ரஜினியும், ஷங்கரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. கடும் பாதுகாப்பையும் மீறி 40க்கும் மேற்பட்டோர் வந்தது ஷங்கரால் நம்ப முடியவில்லை. அவர்களிடம் Ôநீங்க எப்படி வந்தீங்கÕ என கேட்டிருக்கிறார். வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள், Ôமேனேஜரிடம் கேட்டுட்டுத்தான் வந்தோம்Õ என சொன்னதால், Ôஎந்த மேனேஜர், யாரைக்கேட்டு பர்மிஷன் கொடுத்தார்Õ என ஷங்கர் கோபப்பட, Ôதெரிந்தவர்கள் என்பதால் புரொடக்ஷன் மேனேஜரான சக்திதான் எங்களுக்கு அனுமதி கொடுத்தார்Õ என அவர்கள் கூறினர். இதையடுத்து சக்தியை கடிந்துகொண்டார் ஷங்கர்.
பின்னர் பாதுகாப்பு பணியாளர்கள் வந்து, செட்டில் நுழைந்தவர்களை வெளியே அனுப்பினர். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.

No comments: