Wednesday, November 29, 2006

பஞ்சாயத்து காட்சியில் ரஜினிகாந்த் ஆவேசம்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘சிவாஜி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகலில் நடைபெற்று வருகிறது.


நேற்று காலை 11 மணியளவில் முல்பாகல் தாலுகா தேவரசமுத்திரம் என்ற கிராமத்தில், கிராம பஞ்சாயத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுவதை போன்ற காட்சிகள் படமாக் கப்பட்டன.


தேவராய சமுத்திரம் என்ற கிராமத்தில் உள்ள, ஓலேயலகுண்டா மலையின் கீழ், பஞ்சாயத்து கட்டிடம் போன்ற செட் போடப்பட்டிருந்தது. செட் முன்பு கிராம மக்களை போன்று துணை நடிகர், நடிகைகள் குவிந்திருந்தனர். அப்போது ரஜினிகாந்த் மற்றும் விவேக் ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகின்றனர்.


கிராம மக்கள் ரஜினியிடம் தமது குறையை கூறுகின்றனர். அடுத்து கிராம பஞ்சாயத்து தலைவரும், ரஜினியும் ஆவேசமாக பேசும் காட் சிகள் படமாக்கப்பட்டன. மறைந்த பிரபல நடிகை சவுந்தர்யாவின் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக தேவரசமுத் திரம் ஊர் அறிவிப்பு பலகை யை எடுத்துவிட்டு தருமபுரி மாவட்டம் நல்லூர் என பெயர் மாற்றப்பட்டிருந்தது.படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க சென்றார். இன்றும் படப்பிடிப்பு தொடர்கிறது.

No comments:

Blog Archive